கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயபுரா நகருக்கு அருகிலேயே, அதாவது நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பூத்நாள் ஏரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாய் சோபா ஜாலகேரி, 45 வயது. இவரது ஐந்து பிள்ளைகள், அதாவது வித்யா, சுவர்ணா, கௌடேஷ், சானிகா, விகாஸ் என இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது போலீசார் உடல்களை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் எப்படி தெரியவந்தது என்றால், அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு உடல்கள் மிதப்பதைப் பார்த்து ஆதர்ஷ் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து தற்போது உடல்களை மீட்டுள்ளனர். அந்தக் காட்சிகளைத்தான் நாம் பார்க்கிறோம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே கொதிக்க வைத்த என்கவுண்டர்..! பறிபோன தமிழர்கள் உயிர்..!! சிஐடிக்கு வழக்கு மாற்றம்..!!
உடல்களை மீட்ட போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே ஊர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் உள்ளூரில் விசாரித்தபோது சில தகவல்கள் தெரியவந்துள்ளன.
சோபாவுக்கும் அவரது கணவர் மலகாரி பீமாராய் ஜாலகேரிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு பெரிதாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மூன்றாவது மகனான கௌடேஷ், பேச முடியாத மாற்றுத்திறனாளி என்று கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் குடும்பத்தில் பல்வேறு தகராறுகள் நடந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ஆம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுபோன்று அடிக்கடி சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ஒரு வாரத்தில் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்கள் என்பதுதான் கணவரின் வாக்குமூலமாக உள்ளது.
ஆனால், இந்த முறை அவர்கள் ஏரியில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஏரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது தவறி ஏரியில் விழுந்து, ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார்களா? அல்லது குழந்தைகளை மூழ்கடித்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது இது கொலை சம்பவமா? என மூன்று கோணங்களில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை, மிலாது நபி என அந்தந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் முடிந்த SIR பணிகள்..! ஒரு கோடி பேர் நீக்கம்..!! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!