பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மலிவு மற்றும் விரைவான சவாரிகளை வழங்குவதில் பிரபலமாக இருக்கும் Rapido மற்றும் Uber Moto போன்ற ஆன்லைன் பைக் டாக்ஸி செயலிகள் வழங்கி வருகின்றன. ஆனால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசு விதிகளை உருவாக்கும் வரை பைக் டாக்ஸி சேவைகள் இயங்குவதை நிறுத்த வேண்டும் என 2025 ஏப்ரல் 2 ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

இதனை எதிர்த்து ANI டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ஓலா), உபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ரோப்பன் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ராபிடோ) உள்ளிட்ட ஆன்லைன் பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கானது நீதிபதி பி. ஷியாம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பைக் டாக்ஸி சேவைகளையும் ஆறு வாரங்களுக்குள் நிறுத்தி உத்தரவிட்டார். பின்னர் காலக்கெடு ஜூன் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

அதாவது ஜூன் 16, 2025 முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைக் டாக்ஸிகளை நிறுத்துவது கர்நாடகாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்றும், அதன் 75% பயணிகள் தளத்தை தங்கள் முக்கிய வருமானமாகச் சார்ந்து மாதந்தோறும் சுமார் ரூ. 35,000 சம்பாதிக்கிறார்கள் என்றும் ரேபிடோ வாதிட்டது. கேப்டன்களுக்கு ரூ.700 கோடிக்கும், பெங்களூருவில் ரூ.100 கோடி அளவுக்கு ஜிஎஸ்டிக்கும் மேல் செலுத்தியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது . மேல்முறையீடுகள் விசாரிக்கப்படும் வரை பைக் டாக்ஸி சேவை தொடர வேண்டும் என்ற நிறுவனங்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையும் படிங்க: முருகனுக்கே தமிழ் இல்லையா... எல்லாம் வரலாற்று கொடுமை! கொதித்தெழுந்த சீமான்
இதையும் படிங்க: வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பீடு!! விமான விபத்திற்கு ரூ.1000 கோடி இன்சூரன்ஸ் க்ளைம்..?