சமீப காலமாக ஒரு அசாதாரண சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு, இங்கு "மூளையைத் தின்னும் அமீபா" என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் ஏற்படும் தொற்று, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமீபாவின் பரவல், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. கேரளாவின் வெப்பநிலை உயர்வு, மழைக்காலத்தில் தேங்கிய நீரில் பாக்டீரியா மற்றும் காலிஃபார்ம் மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த அமீபா 46°செல்ஸியஸ் வரை வெப்பத்தைத் தாங்கி, தொற்று ஏற்படும். மூக்கு வழியாக நுழைந்து, வாசனை நரம்புகள் (olfactory nerve) வழியாக மூளைக்கு சென்று, திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள் தொற்றுக்கு 1-14 நாட்கள் கழித்து தோன்றும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம் போன்றவை – இவை பொதுவான மூளைக் காய்ச்சல் அறிகுறிகளை ஒத்திருப்பதால், ஆரம்ப நிலையில் நோயறிதல் கடினம். பின்னர், குழப்பம், சமநிலை இழப்பு, பிரமைகள், வலிப்புகள், மயக்கம் என விரைவாக மோசமடையும்.
இதையும் படிங்க: கேரளாவில் களைகட்டப்போகும் ஓணம்.. தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்..!!
கேரளாவை மிரட்டி வரும் இந்த அமீபா மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் அமீபா மூளை காய்ச்சல் காரணமாக கடந்த எட்டு நாட்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதித்து தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கண்காணிப்பு பணியை கேரளா அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
இதையும் படிங்க: வெளிநாட்டுக்கு போகக்கூடாது! நடிகர் சவுபின் ஷாகிருக்கு அதிரடி உத்தரவு போட்ட குற்றவியல் நீதிமன்றம்