சென்னையில் இளம் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்திய முதியவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கையை அறுத்துக் கொண்டு பலமுறை மிரட்டியதால் பெண்ணின் தாய் மாமன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் 19 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
அவருக்கு 65 வயதான முதியவர் ஹரிஷ் குமார் என்பவர் காதலிக்கு மாதிரி லவ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த முதியவர் வற்புறுத்தி வந்ததாகவும் பெண்ணை பின்தொடர்ந்து சென்று கைகளை பிடித்து இழுத்து லவ் டார்ச்சர் செய்ததாகவும் இளம் பெண் கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கழுத்தைக் கீறி கொண்டு முதியவர் ஹரிஷ் குமார் அட்ராசிட்டி செய்தது தெரியவந்துள்ளது.

புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று முதியவர் அத்துமீறியதாக தெரிகிறது. பெண்ணின் தாயார் திட்டிய போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது தாய் மாமனிடம் சென்று அழுது நடந்ததை கூறியதால், ஆத்திரமடைந்த பெண்ணின் தாய்மாமன் முதியவர் ஹரிஷ் குமாரை கத்தியால் வெட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!
காவல் நிலையத்தில் புகார் எடுக்காத காரணத்தால் மீண்டும் பெண்ணிடம் அத்து மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பெண்ணிடம் அத்துமீறிய 65 வயது முதியவரை வெட்டி தாய் மாமன் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!