பீகார் மாநிலம் காராகட்டில் 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர்கள் ஜிதன் ராம் மாஞ்சி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நவி நகரில், என்டிபிசி மின் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாட்டின் கிழக்கு பகுதியில் மின் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையமாக இது விளங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தங்கு தடையற்ற மின் சப்ளை உறுதி செயயப்படும் எனவும் கூறப்படுகிறது. 17,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்ட பணிகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பாட்னா - கயா இடையிலான தேசிய நெடுஞ்சாலை, வாரணாசி - ராஞ்சி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு ஆறு வழி, நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இவை தவிர, பல்வேறு சுற்றுலா சார்ந்த திட்டங்கள், கல்வித் துறை சார்ந்த திட்டங்கள், ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸா? பாக்., டீமா? ராகுல்காந்தி, ரேவந்த் ரெட்டியை வெளுத்து வாங்கிய பாஜக..!

முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, நக்சல் பாதித்த பகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2014க்கு முன் நம் நாட்டில் 75 மாவட்டங்கள் நக்சல்களின் ஆதிக்கத்தில் இருந்தன. தற்போது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்போது வெறும் 18 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் நடமாட்டம் உள்ளது. அதுவும் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். பீகாரில் காட்டு தர்பார் ஆட்சி முடிவுக்கு வந்து, நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி அமைந்த பின், பீகார் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, நேற்று பாட்னா வந்த சமயத்தில், பீகாரின் பாஹல்பூரில் இருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பீகார் வந்துள்ள பிரதமரை கொல்ல இருப்பதாக கூறினார். இதையடுத்து பாஹல்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி. ஹிருதயகாந்த் தலைமையில் உடனடி விசாரணை நடந்தது. முதல் கட்ட விசாரணையில் 71 வயதான மந்து சவுத்ரி என்பவரின் மொபைல் போனில் இருந்து வாட்ஸ்ஆப் அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதியவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகத்துடன் போலீசார் மேலும் விசாரணையை விரிவுபடுத்தினர். அப்போது பாஹல்பூர் மாவட்டத்தில் உள்ள மகேஷி கிராமத்தை சேர்ந்த 35 வயதான சமீர் ரஞ்சன் இந்த சம்பவத்தில் தொடர்புடையர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 71 வயதான மந்து சவுத்ரியின் போனில் இருந்து கொலை மிரட்டல் விடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!