அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு போரில் ஈரான் கடுமையாக பலவீனமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் பகீர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து (பிப்ரவரி 28, 2026) இரு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் "எப்போதும் இல்லாத அளவு வலிமையாக" உள்ளதாகவும், நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
முக்கியமாக, ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று நெதன்யாகு எச்சரித்தார். "பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் கொடுக்க மாட்டேன்" என்று அவர் கூறினார். மொஜ்தபாவை IRGC-யின் "பாவை" (puppet) என்று கேலி செய்து, அவர் பொது இடங்களில் தோன்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டு வருவதாகவும், புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பாசிஜ் படைகள் மீது தெரு தாக்குதல்கள், சோதனைச் சாவடிகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரான் புதிய ஆட்சியாளர் கோமா? ஒரு காலும் போச்சு?! பிரிட்டன் நாளிதழ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை!
"ஈரான் மக்களுக்கு சுதந்திரத்துக்கான பாதை திறக்கும் தருணம் நெருங்கி வருகிறது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம், உதவி செய்கிறோம். ஆனால் இறுதி முடிவு உங்கள் கைகளில்தான்" என்று ஈரானிய மக்களை நேரடியாக உரையாடினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் "முன்னெப்போதும் இல்லாத" கூட்டணி உருவாகியுள்ளதாகவும், தினசரி தொடர்பில் இருப்பதாகவும், கருத்துக்களை பகிர்ந்து முடிவெடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஆட்சி மாற்றம் குறித்த கேள்விக்கு, "ஒருவரை தண்ணீர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்; ஆனால் குடிக்க கட்டாயப்படுத்த முடியாது" என்று உவமை கூறினார். ஈரான் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு உகந்த சூழலை – வான்வழித் தாக்குதல்கள் உட்பட – உருவாக்குவதாகவும், ஆனால் படைகளை களமிறக்கி வலுக்கட்டாய ஆட்சி மாற்றம் செய்ய மாட்டோம் என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்த அறிக்கை உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி போரின் முதல் நாளில் காயமடைந்து (கால் காயம் உள்ளிட்டவை) இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!