மத்திய பிரதேசத்தில் 7,500 கோடி ரூபாயில் 28 நிலையங்களுடன் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். சத்னா மற்றும் தாதியா ஆகிய இடங்களில் புதிய ஏர்போர்ட்களையும் மோடி திறந்து வைத்தார். அத்துடன் முக்கிய நீர்நிலைகளில் படித்துறைகள் அமைக்கவும், பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்கள், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
புகழ்பெற்ற ராணியும், சமூக சீர்திருத்தவாதியுமான அஹில்யாபாய் கோல்கரின் 300வது பிறந்த ஆண்டை ஒட்டி, அவரை சிறப்பிக்கும் வகையில் பிரத்யேக ஸ்டாம்ப்கள், நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கவர்னர் மங்குபாய் படேல், முதல்வர் மோகன் யாதவ், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பெண் தொழில் முனைவோர், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இன்று மத்திய பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், 300 ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணை ஆண்ட ராணி அஹில்யாபாய் நம் அனைவருக்கும் முன்னோடியாக இருந்துள்ளார் எனக் கூறினார். மக்களுக்கு சேவை செய்வதும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் தான் ஆட்சி என்பதன் உண்மையான அர்த்தம் என்று புகழ்பெற்ற ராணியும், சமூக சீர்திருத்தவாதியுமான தேவி அஹில்யாபாய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது? மோடி மறைத்த ரகசியம்.. போட்டுடைத்த முப்படைகளின் தலைமை தளபதி..!
இன்று, நீங்கள் காசி சென்றால், அங்கு தேவி அஹில்யாபாயின் சிலையையும் காண்பீர்கள். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை அனைத்து வளர்ச்சி திட்டங்களில் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு உள்ளோம். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அரசாங்கத்தின் அனைத்து பெரிய வளர்ச்சித் திட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

முன்பு பெண்கள் தங்கள் நோய்களை ஒரு சுமையாக இருக்க விரும்பாமல் மறைத்தனர், ஆனால் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா மூலம் அவர்கள் மருத்துவ வசதிகளை அணுகவும், ரூ. 5 லட்சம் வரை சலுகைகளைப் பெறவும் முடிகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் மற்றும் மின்சார வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ நலத்திட்டங்கள் மூலம் சமூகத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்காக பா.ஜ., அரசு பாடுபட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

பாரம்பரியமாக திருமண உறுதிப்பாட்டின் அடையாளமாக இருந்த சிந்தூர், இன்று பெண்கள் சக்தி மற்றும் தேசிய வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்., எண்ணம் பலிக்காது! பயங்கரவாத அமைப்புகளுக்கு பாடம் புகட்டுவோம்; கனிமொழி ஆவேசம்..!