காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: பாக்., எண்ணம் பலிக்காது! பயங்கரவாத அமைப்புகளுக்கு பாடம் புகட்டுவோம்; கனிமொழி ஆவேசம்..!

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

இப்படி பலத்த அடி வாங்கி தோற்ற பிறகும், போரில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று பாகிஸ்தான் பெருமை பீற்றி வருகிறது. இந்தியாவின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம். நாங்கள் தான் சண்டையில் வெற்றி பெற்றோம் என மார்தட்டி வருகிறது. இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் சிங்கப்பூரில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையின் போது எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் சௌகான், அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் நடந்தன என்பதே முக்கியம், எண்கள் முக்கியமில்லை என்று கூறினார்.
ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் கூறுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது, அது முற்றிலும் தவறான கூற்று என அனில் சௌகான் தெரிவித்தார். இருப்பினும் இந்தியா எத்தனை ஜெட் விமானங்களை இழந்தது என்பதைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.

அவர்கள் ஏன் தோல்வியடைந்தார்கள், என்ன தவறுகள் செய்யப்பட்டன - அவை முக்கியம் என்றும் அனில் சவுகான் கூறினார். நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் செய்த தந்திரோபாயத் தவறைப் புரிந்துகொண்டு, அதைச் சரிசெய்தோம். அதைச் சரிசெய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதைச் செயல்படுத்தி, எங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் மீண்டும் பறக்கவிட்டு, நீண்ட தூர இலக்கை தாக்கினோம் என்றும் அனில் சௌகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!