கர்நாடக வேளாண் விஞ்ஞானியும், நீலப்புரட்சியை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சுப்பண்ணா அய்யப்பன் மர்மமான முறையில் காவிரிக் கரையின் ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7ம் தேதி முதல் திடீரென காணாமல் போன சுப்பண்ணா அய்யப்பன், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரெங்கப்பட்டிணம் தாலுகாவில் உள்ள சாய் ஆஸ்ரம் அருகே இருக்கும் காவிரிக் கரைப் பகுதியில் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டதால் அவரின் இறப்பில் மர்மம் நீட்கிகிறது.

மைசூரில் விஸ்வேஸ்வரா நகரில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த சுப்பண்ணா, கடந்த 7ம் தேதி வீட்டைவிட்டு சென்றார். சுப்பண்ணாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். காவிரிக் கரையில் அடையாளம் தெரியாத சடம் இருப்பதாக மாண்டியா போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென் போலீஸார் உடலைக் கைப்பற்றி, அடையாளம் பார்த்தபோது அது வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா என்பதும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆற்றின் கரையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுப்பண்ணா உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

போலீஸார் தரப்பில் கூறுகையில் “நாங்கள் உடலை மீட்கும்போது, உடல் சிதைந்திருந்தது, அடையாளம் காண முடியவில்லை. சுப்பண்ணா பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வைத்துதான் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தோம். உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை, வீட்டிலேயே சுப்பண்ணா செல்போனை வைத்துவிட்டார், இது தற்கொலை என்று மறுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
ஸ்ரீரெங்கபட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பண்ணா மரணத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள். இந்தியாவில் மீன்புரட்சி எனப்படும் நீலப்புரட்சியை ஏற்படுத்தியவரில் முக்கியமானவர் சுப்பண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சுப்பண்ணா அய்யப்பன்?
கடந்த 1955ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஏலந்தூரில் பிறந்தவர் சுப்பண்ணா அய்யப்பன். 1975ம் ஆண்டு இளநிலை மீன்வளத்துறையில் பட்டப்படிப்பு முடித்த சுப்பண்ணா, 1977ம் ஆண்டு முதுகலையில் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 1998ம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் சுப்பண்ணா பெற்றார்.

இந்தியாவில் மீன்புரட்சி அதாவது நீலப்புரட்சியை ஏற்படுத்தியவர்களில் முன்னோடியாக சுப்பண்ணா கருதப்படுகிறார். இவரின் புத்தாக்கமான மீன்வளர்ப்பு, மீன் பாதுகாப்பு, மீன் பெருக்கம் ஆகியவை பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தது. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தத்வும், அவர்களின் உணவுப் பாதுகாப்பை வலிமையாக்கவும், மீன் வளர்ப்பை வேகப்படுத்தவும், புறம்போக்கு நிலங்களை மீன்வளர்ப்புக்கு பயன்படுத்தவும் சுப்பண்ணா திட்டங்களை வழங்கினார்.
வேளாண் துறை, மீன்வளர்ப்புத்துறைக்கு சுப்பண்ணா ஆற்றிய பணியைப் புகழ்ந்து 2022ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அதன்பின் நிலைத்த வேளாண்மை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளில் சுப்பண்ணா இருந்தார்.

புவனேஷ்வரில் உள்ள சிஐஎப்ஏ உயர்கல்வி நிறுவனம், மும்பையில் உள்ள சிஐஎப்இ கல்விநிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள என்எப்டிபி ஆகியவற்றின் இயக்குநராகவும், தலைவராகவும் சுப்பண்ணா இருந்தார்.
மேலும் மத்திய அரசின் வேளாண் ஆய்வு மற்றும் கல்விப்பிரிவில் செயலராகவும் சுப்பண்ணா பதவி வகித்தார். 69வயதாகினாலும் சுப்பண்ணா தொடர்ந்து கல்விப்பணியிலும், மீன்வளர்ப்பு, அக்வாகல்ச்சர் பிரிவில் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். இம்பால் நகரில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின துணை வேந்தராகவும் அய்யப்பன் இருந்தார்.
இதையும் படிங்க: தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!