அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவகங்களாக பிரிந்து விட்டனர். இருவரும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவளிக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாக பேசும் நிர்வாகிகளை அன்புமணி பொறுப்பில் இருந்து நீக்குவதுமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாமகவின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி மூன்று எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி எனக் கூறப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதி பற்றி திமுக பேசலாமா? வன்னியர்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்க! அன்புமணி ஆவேசம்…
முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழு முன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விசாரனைக்குழு நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதி துரோகி திமுக! அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!