ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என்றும், எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிதான் ரெப்போ விகிதம். இது மாறாததால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களின் வட்டி விகிதங்களிலும் உடனடி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கடன் வாங்கியோருக்கு நிலையான தவணைத் தொகை தொடரும். மேற்காசியப் போர் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற கவலையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம்.

நிதிச்சூழலைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண உதவும் என ரிசர்வ் வங்கி கருதியுள்ளது. அதே நேரத்தில், 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என மேம்படுத்தப்பட்ட கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 6.6 சதவீத கணிப்பை விட சிறிது உயர்வானது.
இதையும் படிங்க: என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!
முதல் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பும் சாதகமாக உள்ளது. இது 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விடக் குறைவு. இந்த முடிவு பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கக் கட்டுப்பாட்டையும் சமநிலையில் வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கடன் வாங்குபவர்கள் இருவருக்குமே தெளிவான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது. வட்டி விகித நிலைத்தன்மை முதலீட்டாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நம்பிக்கையை அளிக்கும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!