2008 இல் IPL தொடங்கியபோது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கப்பட்டது. இது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையாவின் UB குழுமத்தின் கீழ் தொடங்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது அணியின் முதன்மை உரிமையாளராக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் உள்ளது.

ஆர் சி பி அணி 2009, 2011, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் IPL இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் கோப்பையை வெல்லவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற புனைப்பில் அதிரடி ஆட்டத்தை முதலில் இருந்து வெளிப்படுத்தி வந்த ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிங்க: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது கர்நாடக ஐகோர்ட்..!

இதன்மூலம் தனது 18 ஆண்டுகால கனவை நினைவாக்கியுள்ளது ஆர்சிபி அணி. இந்த நிலையில் ஆர் சி பி அணியை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்திடம் உள்ள ஆர்சிபி அணியை 18 ஆயிரத்து 834 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்சி பி அணியை முழு அல்லது பாதி அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை rcb அணியை விற்க எந்த திட்டமும் இல்லாத நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அணியை விற்பனை செய்ய முற்பட்டுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!