ஐபிஎல் கிரிக்கெட் 2025 ஆண்டு கோப்பையை வென்று தனது 18 வருட கனவை நினைவாக மாற்றி நெகிழ வைத்துள்ளது பெங்களூரு அணி… ஆர். சி. பி. கோப்பையை வெல்லாது என்ற பார்வை மட்டுமே இருந்த நிலையில், தெறி வெற்றியை எட்டியது பெங்களூரு அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதனிடையே, மாநில முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆர்சிபியின் இடைவிடாத முயற்சி இறுதியாக இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் அதன் மகிமை தருணத்தைக் கண்டது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

விராட் கோலியின் 18 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் முத்திரையிடப்பட்ட மரபு என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு சிஎஸ்கே வீரரிடமிருந்து ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள அண்ணாமலை, அடுத்த ஆண்டு கோப்பைக்காக நாங்கள் வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!