பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

போர் ஒத்திகை என்பது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது? காயம் அடைந்தவர்களுக்கு எப்படி மருத்துவ சிகிச்சை அளிப்பது? சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க: எங்கள மீறி தொடுடா பாக்கலாம்.! களம் இறங்கிய கமோண்டோக்கள்.. திருப்பதியில் திடீர் பரபரப்பு..!

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த போர்க்கால ஒத்திகையின்போது வான் பாதுகாப்பு அமைப்பு, கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு மீட்பு குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்துகை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்த நிலையில் அரியானாவில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டத்தில் நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரியானா மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாஞ்சாபில் மட்டும் வரும் ஜூன் 3ம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இப்படி பண்ணலாமா? சசி தரூர் செயலுக்கு வலுக்கு எதிர்ப்பு.. ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக..!