உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் இந்த பாலத்தின் மீது வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், காஷ்மீரின் சனாப் நதியின் மேல் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 1,315 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த ரயில்வே பாலம் மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் உறுதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

இந்த பாலத்தின் மூலம் கத்ரா - ஸ்ரீநகர் இடையிலான பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் 1,486 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!