ஆக்சியம்-4 (Ax-4) விண்வெளி திட்டம், நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை உள்ளடக்கிய ஒரு தனியார் விண்வெளி பயணமாகும். இந்த திட்டம் 2025 ஜூன் 25 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் மற்றொரு மைல்கல் பயணமாக, 1984இல் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியராக சுக்லா பதிவு செய்யப்பட்டார்.
மேலும் சுபான்ஷு முதல் இந்தியராக ISS-ஐ அடைந்தார். இந்த பயணம், NASA, SpaceX, மற்றும் Axiom Space இணைந்து நடத்திய தனியார் பயணமாகும், இதற்கு இந்திய அரசு சுமார் ₹548 கோடி செலவு செய்தது. ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், கிரேஸ் என்ற டிராகன் விண்கலத்தில், ஜூன் 25, 2025 அன்று காலை 12:01 மணிக்கு (IST) புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பயணம் தொடங்கியது. ஜூன் 26 அன்று மாலை 4:01 மணிக்கு (IST) ISS-இல் விண்கலம் இணைந்தது.

சுபான்ஷு, ISS-இல் 14 நாட்கள் தங்கி, 60-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்தனா். இந்த நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) ’ஆக்ஸியம்-4’ குழுவினர் தொடங்கினர். சுமாா் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்கினர்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக தரையிறங்கினார் சுபான்ஷு சுக்லா!! 22 மணி நேரத்தில் நடந்தது என்ன? இனி காத்திருக்கும் சவால்கள் என்ன?
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரோவை சேர்ந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: பூமியை நோக்கி சுபான்ஷு சுக்லா.. இன்று மாலை தரையிறங்குகிறார்..!