குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆப் ஆன 30 விநாடிகளில் விழுந்து வெடித்து சிதறியது. விபத்து நடந்து 3 நாட்கள் ஆனாலும் அதனால் ஏற்பட்ட துயரம், பதட்டம் இன்னும் அடங்கவில்லை. காரணம் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் தீயில் கருகியதுதான். இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினர் மூலம் ஒவ்வொருவரின் பயண பின்னணியும் வெளியாகி மனதை ரணமாக்குகிறது.
இத்தனை பெரிய விமான விபத்தில் கிடைத்த ஒரே ஒரு ஆறுதல், அதிர்ஷடவசமாக ஒருவர் உயிர் பிழைத்ததுதான். அதுவும் விமானம் விழுந்து வெடிப்பதற்கு ஒரு சில நொடி முன்பு அவராக கீழே குதித்து தப்பினார். அவர் தான் 40 வயது ரமேஷ் விஷ்வாஸ் குமார்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இவர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
20 ஆண்டுகளாக பிரிட்டனில் தான் வசிக்கிறார். விஸ்வாஸ் குமார் உயிர் தப்ப முக்கிய காரணம் அவரது சீட் இருந்த இடம். அவர் 11ஏ என்ற சீட்டில் தான் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!
பிசினஸ் கிளாஸ் சீட்கள் முடிந்து, எக்கானமி கிளாஸ் துவங்கும் இடத்தில் முதல் வரிசையில் ஜன்னல் ஓரமாக அந்த சீட் அமைந்திருக்கிறது. பிசினஸ் கிளாஸ், எக்கானமி கிளாஸ் இரண்டுக்கும் நடுவில் அவசர கால கதவு இருக்கிறது. விமானம் தரையில் மோதி வெடிப்பதற்கு ஓரிரு நொடிகள் முன்பு அசர கால கதவு வழியாக கீழே குதித்து தப்பினார் விஷ்வாஸ் குமார். 11A சீட்டால் நடந்த அதிசயம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த விஷயம் தாய்லாந்து பாடகர் ரூங்ஸாக் லோய்ச்சுசாக் (Ruangsak Loychusak) வியப்பில் ஆழ்ந்துள்ளார். காரணம், 27 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தபோது அவரும் அதே 11ஏ சீட்டில் தான் பயணித்தார். 1998 டிசம்பர் 11ல் தாய் ஏர்வேஸ் விமான விபத்தில் 101 பேர் இறந்தபோது, 20 வயதான ரூங்ஸாக் உயிர் தப்பினார். இப்போது 47 வயதாகும் அவர், ரமேஷ் 11A சீட்டில் பயணித்து உயிர் தப்பியதை கேட்டு சிலிர்த்து போனதாக கூறியுள்ளார்.
நானும் அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தேன். விபத்துக்கு பிறகு இது தனது 2வது வாழ்க்கை. ஏர் இந்தியா விமான விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் ரூங்ஸாக் தெரிவித்துள்ளார்.

பொதுவாக விமானத்தில் பயணிப்பவர்கள் 11ஏ இருக்கையை எப்போதும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் விமானம் தரையிறங்கிய பின், அதில் இருந்து கடைசியாக வெளியேறும் பயணியாக 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர்களே வருவார்கள். அதேபோல் விமான இறக்கைகளுக்கு அருகில் இருக்கும் என்பதால், மேக கூட்டங்களை கூட சரியாக பார்க்க முடியாது.
அதேபோல் 11எ இருக்கையை பின்னோக்கி சாய்க்க முடியாது. வெளியே வேடிக்கையும் பார்க்க முடியாது என்பதால் பயண நேரம் முழுவதும் அலுப்பு தட்டிவிடும்.. இதனால் அனைவரும் அந்த இருக்கையை வெறுத்து வந்த நிலையில் தற்போது அனைவரும் தேடித்தேடி முன்பதிவு செய்யும் இருக்கையாக 11எ இருக்கை மாறி உள்ளது.
இதையும் படிங்க: கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!