மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும் குடும்பமும் தமிழ் மொழி தான் எனது குடும்பம் இங்கு இருக்கிறது., அதனால்தான் சிவராஜ் குமார் எங்கே இருக்கிறார்., அவரது கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது., அவரும் நம் குடும்பத்தில் ஒரு அங்கம் என பேசி இருந்தார்.

இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது என்றும் எச்சரித்தனர். படம் வழியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பிரச்சனை இன்னும் ஓயாமல் உள்ளது. எனவே, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, மன்னிப்பு கேட்பதில் என்ன உள்ளது., மொழி ஆதாரங்கள் உள்ளதா என பல கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

இந்த நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது திரைப்படத்தை வெளியிட விரும்பவில்லை என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!