புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார். இம்முறை பிரச்சாரத்துக்கு முன்னதாக, தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை முன்வைத்து புதுச்சேரி காவல்துறை 19 இடங்களுக்கு அனுமதி மறுத்தது. இறுதியில், நான்கு இடங்களில் மட்டும், ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மணி நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடு பிடித்த அரசியல் களம்... அதிருது புதுவை... சூறாவளி பிரச்சாரத்திற்கு கிளம்பிய விஜய்..!!
தேர்தல் பிரச்சாரத்திற்கு புதுச்சேரி நோக்கி விஜயை சென்று கொண்டிருந்த நிலையில் அவரது கார் மீது சில இளைஞர்கள் ஏறிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.m விஜய் காரின் மறித்து பூக்களை தூவி தமிழக வெற்றிக்கழக நண்பர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது மரக்காண பகுதியில் சென்று கொண்டிருந்த விஜய் காரை ஒரு சில இளைஞர்கள் மரித்து மேலே ஏறியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!