• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழகத்தில் மன்னார்குடி மற்றும் உளுந்தூர்பேட்டையில் விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 11 Jun 2026 22:26:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Two tragic road accidents in Mannargudi and Ulundurpet kill five school students in Tamil Nadu

    தமிழகத்தில் இன்று மாலை அடுத்தடுத்து நேர்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 5 பள்ளி மாணவர்கள் சம்பவ இடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விபத்துகள் நேர்ந்துள்ளன.

    முதல் விபத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரங்கேறியுள்ளது. காரிக்கோட்டை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வழக்கம் போல் தங்களது வீடுகளுக்குச் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி நோக்கி அதிவேகமாக வந்த டவேரா கார் ஒன்று, காரிக்கோட்டை பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அதன் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில், 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களான லோகேஷ்வரன், ரஷித் மற்றும் 7-ஆம் வகுப்பு பயிலும் ராஜமுரளி ஆகிய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மன்னார்குடி காவல் துறையினர், மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற கார் ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்துப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், "ராஜமுரளி, ரஷித் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய 3 மாணவர்களும் இறந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்; இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு அரசு என்றும் துணையாக நிற்கும்" எனத் தனது தார்மீக இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    மற்றொரு துயர விபத்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை 4:45 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வயதான ஜெஸ்டின் மற்றும் 17 வயதான புருனோ ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆலன், சுஜீத் மற்றும் அஜய் ஆகிய 3 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்துத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மாணவர்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று மாணவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    இதையும் படிங்க: கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரானுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; சுவிட்சர்லாந்தில் ஜூன் 19-ல் கையெழுத்து!

    அமெரிக்கா - ஈரானுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; சுவிட்சர்லாந்தில் ஜூன் 19-ல் கையெழுத்து!

    உலகம்
    "இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!" – தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

    "இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!" – தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்; தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

    ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்; தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

    அரசியல்
    "சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு படை தேவை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துப் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

    "சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு படை தேவை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துப் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    "இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!" – தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்; தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

    ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்; தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

    அரசியல்

    "சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு படை தேவை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துப் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியீடு; மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்வு!

    தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியீடு; மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்வு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share