ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் முதல் 100 இடங்களில் இடம்பிடித்ததுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) QS தரவரிசையில் 77வது இடத்தில் உள்ளது.

UK, US, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க UGC கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதில் UWA இந்தியாவில் இரண்டு வளாகங்களைத் திறக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் மும்பையில், அதன் முதல் சர்வதேச கிளை வளாகங்களை அமைக்கவுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கல்வி, தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட மையங்களாக இவ்விரு நகரங்களும் விளங்குவதாகவும் அவை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ளதையும் இப்பல்கலைக்கழகம் மேற்கோள் காட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் மாணவர் தேர்வுகளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து UWA இன் இந்த முயற்சி உள்நாட்டிலேயே உயர்தர கல்வியை வழங்கும் என்று கூறப்படுகிறது. UGC வழிகாட்டுதல்களின்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒப்புதல் பெற்ற பிறகு கல்வி நடவடிக்கைகளைத் தொடங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. இணையதள வாயிலாக காண ஏற்பாடு..!