நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதேபோல ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே நான்காம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நீட் மறு தீர்வு நடத்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், மறுதேர்வு நடத்த முடியாது என்று திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இதையும் படிங்க: எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாத என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடிக்கு அடுத்த இடி! டிஜிபி, சென்னை கமிஷனருக்கு பறந்த கோர்ட் உத்தரவு