தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும் பரவி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மும்பை, பெங்களூரு, தெலுங்கானா, ஆந்திராவில் பருவ மழை தொடங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் இருக்கு! 12 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... உஷார் மக்களே!

மேலும், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பருவமழை மேலும் பரவி விட்டதாகவும் மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜில் அப்டேட்..! வெளுக்கப் போகுது மழை.. எந்ததெந்த இடங்கள் தெரியுமா?