கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சஞ்சய் - சித்தாவா தம்பதியினர். இவர்களுக்கு அக்பினா(8), அவனி(6) என்ற 2 மகள்களும், ஆர்யா(4) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் சஞ்சய் ஆடு மேய்ப்பதற்காக பல்லாரி மாவட்டம் குருகோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பரதனஹள்ளி கிராமத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

அங்கு ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது ஆடுகளை மேய்க்கும் வேலையில் கணவன் மனைவியும் ஈடுபட்டனர். இதற்காக தம்பதி பரதனஹள்ளியில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிப்போக, ஆத்திரமடைந்த சித்தாவா, தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், அங்குள்ள பண்ணை குட்டையில் தனது 3 குழந்தைகளையும் வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கால் சீரழிந்த குடும்பம்.. ஆசை மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

தனது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சஞ்சய், உடனடியாக இதுகுறித்து குருகோடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்து பண்ணை குட்டையில் இருந்து சித்தாவா மற்றும் அவரது 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய்யிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 3 குழந்தைகளை பண்ணை குட்டையில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மூன்று தலைமுறையை அழித்த கள்ளக்காதல்... 65 வயது பாட்டி முதல் 5 வரை குழந்தை வரை ஒரு குடும்பமே காலி...!