தமிழகத்தில் புயல் வேகத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்களுக்கு மயிலிறகால் வீசாமல் எப்போது இரும்பு கரம் கொண்டு அடக்குவீர்கள் விஜய் அங்கிள் என மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர் .பி உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள காணொலியில், தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பொய்க்கால் குதிரை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பதிவாக குற்ற சம்பவங்கள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது விஜய் அங்கிள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களை அச்சப்பட செய்கிறது விஜய் அங்கிள். போதைப்பொருள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை போதைப் பொருள்கள் கடத்தல் கும்பலை ஒடுக்குவதற்கு என்ன நடவடிக்கை ?கோட்டை விட்டதா? விஜய் அங்கிள் .
இதையும் படிங்க: தம்பி விஜய் மாங்காய் பறிக்க போய் இருந்தீங்களா?.... செதில், செதிலா உலுக்கிடுவோம்... சி.எம்.மை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்...!
ஒரு மாதத்தில் தீர்வு காண முடியாது என எல்லோருக்கும் தெரியும் எல்லோரும் அறிந்தது தான் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் வெளியீட்ட அறிக்கையில் நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு நீஙகள் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதற்கு பாடம் படிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர் மடிய வேண்டும் என்று உங்கள் கவனத்தில் கொண்டுவந்தார் ஆனால் அதையெல்லாம் நீங்கள் கேட்பதற்கு உங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது.
நடைபெறம் இந்த குற்ற சம்பவங்களுடைய தீவிரத்தை வேகத்தை இதனுடைய ஆழத்தை இதனுடைய பாதிப்பை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா விஜய் அங்கிள் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கவலையாக இருக்கிறது.
குழந்தைகள், பெண்கள் ,பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது என்று கண்ணீரோடு அழுகிறது உங்களுக்கு கேட்கிறதா?. நேற்று நடத்திய ஆய்வு கூட்டத்திலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் எந்தவித அலட்சியும் இருக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியதாகவும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து நிலவரம் குறித்து நீங்கள் அறிந்த பின்னரும் குற்றங்களின் எண்ணிக்கையை சம்பவங்களினுடைய அந்த வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என்று சொன்னீர்களே விஜய் அங்கிள்
தற்போது புயல் வேகத்திலேயே குற்ற சம்பவகள் அதிகரித்து வருகிறது இதை மயிலிறகால் வீசி தடுக்க முடியாது விஜய் அங்கிள். மயிலிறகு போல நீங்கள் வீசுவதால் வேலைக்கு ஆகாது விஜய்அங்கிள். சட்டம் ஒழுங்கை காப்பற்ற விஜய் அங்கிள் நீங்கள் எப்போது இரும்பு மனிதராக மாறிவீர்கள் எப்போது நீங்கள் இரும்பு மனிதராக மாறி உறுதியான உத்தரவு வழங்குவீர்கள் என்று உங்களுக்கு வாக்களித்த மக்கள் இன்றைக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இந்த தமிழ் சமுதாயம் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மாதம் அல்ல நீங்கள் இன்னும் எத்தனை காலம் எடுப்பீர்கள் இந்த குற்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துகிற இரும்பு மனிதராக , இரும்பு கரம் கொண்டுநடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது மயிலிறகால் வீசி காற்று வாங்குவீர்களா என்பதை காலம்தான் நமக்கு பதில் சொல்லும் எங்கே போகிறது தமிழகம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு... பிச்சை எடுப்பது ஏன்? - ஆதவ் அர்ஜுனாவை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!