முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை பசுமலை பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்: குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி நம்முடைய எடப்பாடியாரும், பாரதப் பிரதமர் மோடியும் மதுரை வரவிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மண்டேலா நகர் பகுதியிலே மிக விமர்சையாக, போதிய இடவசதியோடு, போதிய பாதுகாப்போடு அங்கே அமைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையிலே வரவேற்பதற்கும் இந்த மூன்று பகுதி மக்கள் தங்களைத் தாங்களே ஆட்படுத்திக் கொண்டு பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தோடு மட்டுமல்லாமல் அனைத்து இந்திய அதிமுக 2026-லே மக்கள் எழுச்சியோடு, மக்கள் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்புக்கு வரும். எடப்பாடியார் ஆட்சியில் முதலமைச்சராக வருவார் என்ற செய்திதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் எழுந்து கொண்டிருக்கிறது.
சசிகலா புது கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, நாங்க அவங்களப் பத்தி அதிகமா நாங்க பேசுறதுமில்லை, அதைப் பத்தி நாங்க எதுவும் பண்றதுமில்லை. அண்ணன் எடப்பாடியார் ஏற்கனவே சொல்லி உள்ளார், அதனால் அந்தத் தகவலைப் பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ செய்வார்கள், அதைப் பத்தி பெருசா எடுத்துக்கல. அனைத்திந்திய அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் தான் போட்டி. சில பேர் சொல்லுவாங்க திமுக-வுக்கும் அண்ணா திமுக-வுக்கும் போட்டின்னுவாங்க. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் அண்ணா திமுக-வுக்கும் திமுக-வும் தான் போட்டி. அதிமுக தான் முதன்மைக் கட்சி. ஆகவே திமுக எங்களை எதிர்க்கிறது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.
அண்மையில கூட்டத்துல விஜய் ஸ்டாலின் புதிய நண்பர்னு சொல்லி விஜய் சொல்லி இருந்தது குறித்த கேள்விக்கு, அவருடைய கருத்துக்கள் எல்லாம் இப்போ நாங்க பொதுவா எடுத்த மாட்டோம். நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேன், ஏற்கனவே அவர் ஒரு கருத்து சொன்னாரு, அந்தக் கருத்துக்கு எல்லோரும் விமர்சனம், எல்லோரும் அதற்கான பதிலுரையை வழங்கிவிட்டோம். மீண்டும் மீண்டும் அவரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அருமை அண்ணன் எடப்பாடியார் சொன்ன மாதிரி இன்னும் அவர் மக்கள் மத்தியில வரல. மக்கள் மத்தியில வரும்போது அவர் என்ன கருத்து சொல்றாரோ, அதை நாங்க பேசுறோம்.
சசிகலா அவர்கள் வந்ததனால அதிமுக-க்கு எதுவும் பின்னடைவுகள் வருமா, அதிமுக-க்கு இனிமேல் பின்னடைவே இல்லை, எல்லாம் முடிஞ்சு போச்சு. அதிமுக உச்சியில் இருக்குது. கோபுரத்தின் உச்சியில் மிகத் தெளிவாக கோபுரக் கலசமாக இருக்குது. யார் வருவதைப் பற்றியோ, போவதைப் பற்றியோ எங்களுக்கு அண்ணா திமுக-வில் கவலையில்லை. அதிமுக அடுத்த ஆட்சிப் பீடத்திலே அமர இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திமுக-வின் எதிர்ப்புணர்ச்சி கிடைக்கிறது நேற்று ஒரு நாள் பார்த்தேன் நலத்திட்ட வழங்கினாங்க, எங்களுடைய தொண்டர்களாக வழங்கினாங்க. அங்க பார்க்கும்போது அத்தனை பெண்களும் சொன்னாங்க எங்களுக்கு 1000 கொடுத்தாலும் சரி, 5000 கொடுத்தாலும் சரி எங்க ஓட்டு அண்ணா திமுக-தான், பெண்கள் பாதுகாக்கிற கட்சி அண்ணா திமுக-தான் என்று அண்ணா திமுக என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.
ஆகவே இனி மற்றவர்களுக்கு வேலை இல்லை. நாங்கள் ஆரம்பித்த களப்பணியைத்தான் இன்றைக்கு திமுக செய்றாங்க. நீங்களாம் பார்த்திருப்பீங்க வாக்குச்சாவடி முகவர் அது இதுன்னு கூப்பிட்டாங்க. ஆனா எடப்பாடியார் தான் அருமை அண்ணன் அம்மாவினுடைய வழியில இந்த முகவர்களை அமைப்பிற்கு, வழிகாட்டி அவர் தான். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 70,000 பூத் கமிட்டியிலும் அண்ணா திமுக 65-லிருந்து ஏறக்குறைய 70,000 ஆயிடுச்சு, 65-லிருந்து 70,000 பூத் கமிட்டியிலும் அண்ணா திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்காங்க. எங்கு நோக்கினும் அண்ணா திமுக தொண்டர்கள் இருக்காங்க. ஆகவே எங்களுடைய களப்பணி தொடங்கிவிட்டது, இனி வெற்றி ஒன்றே எங்களுக்கு இலக்கு.
சட்டசபையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வந்து ஜெயலலிதா, எம்ஜிஆரோட ஆதரவோட ஸ்டாலின் முதலமைச்சராவார் என்று கூறியது குறித்த கேள்விக்கு, கொள்கைக்கு முரண்பட்டுப் போயிட்டா எப்படி வேணாலும் பேசலாம். கொள்கைக்கு முரண்பாடாகக் கொண்ட எண்ணங்களுக்கு முரண்பாடாகப் போய்விட்டது என்றால் அதை எப்படி வேணாலும் பேசலாம், அதை நாம் பெருசாகக் கருத வேண்டிய அவசியமில்லை. அவர் தனிப்பட்ட உறுப்பினரோ எதிர்க்கட்சி உறுப்பினரோ இப்ப இல்ல. ஆனால் அவர் சொன்னதை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆசியோடு என்று சொன்ன அந்த வாசகங்களை இங்கே இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? அவரால ஏற்றுக் கொள்ள முடியுமா.
டிடிவியை கூட்டணிக் குள்ள சேர்த்த நிலையில் ஓபிஎஸ்-ஐ சேர்க்கிறதுல என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் அவர் தனி மனிதர், கட்சி இல்லையே அவர், கூட்டணி சேர்க்கிறது கட்சி வந்தா தான கூட்டணி சேர்க்க முடியும் என திருப்பரங்குன்றம்
M LA ராஜன் செல்லப்பா கூறினார்.
இதையும் படிங்க: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!