மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது கொல்கத்தாவின் சவுரங்கி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “பா.ஜ.க.வால் எங்களை வீழ்த்த முடியாது. மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த பிறகு, டில்லியை கைப்பற்றுவேன். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பா.ஜ.க.வை முற்றிலுமாக அகற்றுவேன்” என்று உறுதியாகக் கூறினார்.
மேலும், “எனக்கு அதிகாரமோ, பதவியோ தேவையில்லை. டில்லியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவதே எனது இலக்கு. மேற்கு வங்கத்தில் அவர்களின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. அதேபோல் டில்லியிலும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

மம்தாவின் இந்தப் பேச்சுக்கு உடனடி எதிர்வினை வந்தது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. சார்பில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா சிரித்தபடி, “மேற்கு வங்கத்திலேயே மம்தாவுக்கு எதுவும் மிச்சம் இல்லை. அதன் பிறகு அவர் எப்படி டில்லிக்கு வர முடியும்?” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க.வுக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மம்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பேச்சு எதிர்காலத்தில் இந்தியா கூட்டணியின் தலைமை பற்றிய விவாதங்களையும் தீவிரப்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மே.வங்கத்தை ஜெயிச்சதும் டெல்லி தான் டார்கெட்!! வேகம் காட்டும் மம்தா! பாஜக மீது தாக்கு!