இன்று சோழிங்கநல்லூரில் நடந்த பாமக ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது நானோ இவங்களோ கிடையாது. நீங்கதான் பாட்டாளி மக்கள் கட்சி, நீங்க இல்லனா கட்சி கிடையாது. இது என் சொத்தோ, என் பாட்டன் சொத்தோ, இல்ல யார் சொத்தும் கிடையாது. நீங்கதான் பொதுக்குழுவில முறையாக அனைவரையும் தேர்வு பண்ணீங்க. உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன்.

பொறுப்புக்குள் வரும், போகும் . ஆனால் நிரந்தரம் உங்களுடைய அன்பு, உங்களுடைய பாசம். அது என்னைக்குமே போகாது. எனவே இன்று காலையில் ஒரு ஐந்து மாவட்டங்கள், மாலையில் ஐந்து ஆறு மாவட்டங்கள், நாளை காலையில்ரு ஐந்து மாவட்டங்கள், நாளை மாலை ஆறு மாவட்டங்கள், நாளை மறுநாள் காலையில் மற்ற மாவட்டங்கள் என தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: அண்ணா எவ்வழியோ.. அதுவே என் வழி..!! அன்புமணிக்கு ஆதரவாக இறங்கிய கோவை மா.செ..!

நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா அவர்கள் நம் கட்சியை தொடங்கி இருக்கின்றார். சமூக நீதி, சமத்துவம், சனநாயகம் என்ற அவரது கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி களத்தில் வேகமாக இறங்குவோம்.

அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக உங்களுடன் சேர்ந்து நான் இறங்குவேன். நம் கட்சியை போன்று தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கிடையாது. கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்முடைய இலக்கு அதை அடைவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நமக்குள் எந்த ஒரு வேற்றுமைகளும் இருக்கக்கூடாது.

அதிக அளவில் புதிய உறுப்பினர்களை இளம் உறுப்பினர்களை சேருங்கள். இருக்கின்ற உறுப்பினர்கள் உங்களுடைய அட்டையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இது அடுத்த மூன்று வாரத்திற்குள் இது நடைபெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!