ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கிய தொண்டர்கள். தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை, மக்கள் தலைவர் என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் செல்போன் எண் கொடுத்து மன்றத்தில் சேருவதற்கும் அழைப்பு.
தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம் என்ற பெயரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்
அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல் நம்பரும் கொடுத்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் மக்கள் தலைவர் அண்ணாமலை தலைமை ரசிகர் சமூக சேவை நற்பணி மன்றம்
இதையும் படிங்க: விஜயை ஒரு நைட் ஜெயிலில் வைத்தால்... தமிழ்நாடு அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை...!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாஜக கட்சியினரிடம் கேட்ட போது அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை துவக்கி உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர் .
ஒரு அரசியல் கட்சி தலைவர் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கிய சம்பவம், ஆண்டிப்பட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.
இதையும் படிங்க: ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!