சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தவெக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடக்க தொடங்கி இருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மட்டுமே பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை விஜயின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்கப் போவதாகவும், முதற்கட்டமாக 100 இடங்களில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிர்ணயத்துள்ள இலக்கு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதில் 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர் என்ற இலக்கை விஜய் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. அதில் குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற இலக்கை அவர் நிர்ணயம் செய்திருக்கிறார். அதை நோக்கி நிர்வாகிகள் பயணிக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். நிர்வாகிகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் களமிறங்குவது கன்பார்ம்... சின்னத்தை ஃபைனல் செய்த விஜய்... ஆனா ஒரு சின்ன குழப்பம்..!