காவிரி விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது கர்நாடகா அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை என்று குறிப்பிட்டார். காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது கர்நாடகா திறந்து விட்டிருப்பது உபரி நீரை மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.
கேரள வயநாட்டில் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள நீரே கபினி உபரி நீர் வாயிலாக ஆடிப்பெருக்கு அன்று தமிழகம் வந்தது என்றும் கூறினார். மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி கேள்வியை எழுப்பிய நிலையில் தான் மத்திய அமைச்சர் பதில் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் மேகலாத விவகாரத்தில் தமிழ்நாடு சட்ட நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணையால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழியும் என்றும் வனவிலங்கு சரணாலயம் அழியும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!
தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, தமிழகத்திற்கு நீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே தமிழகத்திற்கு நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அணை கட்டப்பட இருப்பதாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி வழக்கு தொடுக்கலாம் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி மனுவுடன் டெல்லி செல்ல வேண்டும் எனவும் சௌமியா அன்புமணி அறிவுறுத்தினார். மேலும் பேச்சு வார்த்தை முயற்சியே தேவையில்லை என்பதையும் அப்போது குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி உரிமையில் CM விஜய் கறார்..! மேகதாது விவகாரத்தில் முதல்வரின் அதிரடி ட்விஸ்ட்... பெங்களூரு சர்ச்சைக்கு DOT..!