மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கமடைந்து உள்ளதால், மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் உணவு கிடங்குகள் அமைத்ததாக கூறி 309 கோடி ரூபாயை திமுக அரசு மோசடி செய்துள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டலின் அவர்கள், துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக... விளைவு பயங்கரமா இருக்கும்... திருமா. வார்னிங்...!
நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?
விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ₹309 கோடி எங்கே சென்றது? குறித்த நேரத்தில் திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், ₹160 கோடி ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் 30 - 40 நாட்கள் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதலமைச்சரோ, உணவுத் துறை அமைச்சர் திரு சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை?
கொள்முதல் செய்வதில் திமுக அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்? ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்வதில், திமுக அரசு வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகின்றன.
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டலின் அவர்களுக்கு, மத்திய அரசின் மீது பழி போடக் கூச்சமாக இல்லையா?
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள், துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர்.
நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்புக் கிடங்குகள் மற்றும்… https://t.co/ZuUGYsZwt3 pic.twitter.com/Cy9nal5hfu
— K.Annamalai (@annamalai_k) November 20, 2025
இதையும் படிங்க: அடாவடி, நிராகரிப்பு, திணிப்பு... அனைத்துக்குமான போராட்டம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி...!