ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சத்தா தலைமையில் மாநிலங்களவை சேர்ந்த 7 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் கூண்டோடு பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் தற்போதைய பலம் 106 இல் இருந்து 113 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களவையை பொறுத்த வரை எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு மெஜாரிட்டி எண்ணிக்கையான 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக தற்போது மெஜாரிட்டி எண்ணிக்கையான 123 ஐ நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மாநிலங்களவையை பொறுத்தவரை பாஜகவுக்கு தனித்து பெரும்பான்மை இல்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை இருப்பதால் மசோதாக்களை எளிதில் நிறைவேற்றி வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!
தற்போது தனித்தே பாஜக மெஜாரிட்டி எண்ணிக்கை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் காலங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு மசோதாவையும் பாஜகவால் எளிதாக நிறைவேற்ற முடியும்.
அதே சமயம் 1990 களில் மாநிலங்களவையில் 108 ஆக காங்கிரஸ் கட்சியின் பலம் 2013 இல் 72 ஆக குறைந்து பின்னர் படிப்படியாக அதுவும் குறைந்து தற்போது மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 29 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியை இழந்து வருவதும் பாஜக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மயிலாப்பூரில் திமுக முறைகேடு..! "தட்டிக் கேட்டா அடிக்கப் பாயுறாங்க"..! தமிழிசை பகிரங்க எச்சரிக்கை..!!