''பாஜக ஆட்சிக்கு வந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது. கணக்கில் வீக்காக இருந்தால் நாங்கள் உதவி செய்கிறோம். கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டால் வருவதில்லை. முதல்வர் கணக்கில் வீக் என நினைக்கிறேன்'' என பாஜக நிர்வாகி குஷ்பு விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு தமிழகத்திற்குிதிழங்காமல் வஞ்சித்து வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை முன் வைத்து வருகிறார். இதற்காக மத்திய அரசைக் கண்டித்து கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது திமுக.
இதற்கு பதில் அளித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி குஷ்பு, ''இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது.பள்ளி செல்லும் குழந்தையைப் போல குற்றம்சாட்டுகிறார். பாஜக என்றால் பயம் இருக்கிறது. அதனால் புலம்பல் இருக்கத்தானே செய்யும்.
இதையும் படிங்க: தலித் வன்கொடுமை… நாங்களே களத்தில் இறங்குகிறோம் முதல்வரே..! பா.ரஞ்சித் கிடுக்குப்பிடி..!
பாஜக ஆட்சிக்கு வந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது. கணக்கில் வீக்காக இருந்தால் நாங்கள் உதவி செய்கிறோம். கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டால் வருவதில்லை. முதல்வர் கணக்கில் வீக் என நினைக்கிறேன்
பள்ளியில் ஆசிரியர்களால் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.கட்சி ரீதியாக பார்க்காமல் அனைத்து கட்சி பெண்களையும் சேர்த்து பெண்கள் தொடர்புடைய இந்த பிரச்சனைக்கு கூட்டுக் குழு அமைத்து நடவடிக்கை வேண்டும்.நான் மும்பையில் இருந்து இங்கு வந்த போது தமிழகத்தில் வாழ எளியையாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. பெண்கள் வெளியே சென்றால் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது.

விஜயிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். ஒரு கட்சி தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பது தவறில்லையே. கேட்காமல் எப்படி கொடுப்போம்.டப்பிங்ல் முதல்வருக்கு தான் நிறைய அனுபவம் உள்ளது. இவரால் பார்க்காமல் படிக்கக்கூட முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேப்பர் இல்லாமல் பேசுவார்.
பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு மணிப்பூர் குறித்து நாம் பேசுவது சரிவராது.அங்கு வங்கதேச ஊடுருவல் என பல பிரச்சனைகள் உள்ளது. எனது தந்தை இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.பாஜகவிற்கு எதிராக நிற்பவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வக்ஃபு சீர்திருத்தம் குறித்து இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தனியாக நிற்கிறார் சீமான். அதற்கு கெத்து வேண்டும். பாராட்டலாம்.காங்கிரசுக்கு தனியாக நிற்க தைரியம் உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: 200 இலக்கு... நான் நேரடியாக பரப்புரைக்கு செல்லாமலேயே வெற்றி தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு... மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!