திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. அதில், ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று பரப்புரை மேற்கொள்ளும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது.

அப்போது பேசிய ஸ்டாலின், உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் இதுவரை 24 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஒன் - டூ- ஒன் சந்திப்பை நடத்தியிருக்கிறோம். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமில்லை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.
இதையும் படிங்க: நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.

வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ‘common DP’-யை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது, தமிழ்நாட்டு மக்களை நம்ம மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்குற ஒரு முன்னெடுப்பு என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 100 நாட்கள் வாகனங்களை சிறைபிடிக்க வேண்டும்... காவல்துறை உத்தரவால் கலங்கிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள்!!