அரசியல் கட்சித் தலைவர்கள் தம்மை நேரில் சந்தித்து, நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ மதிப்பெண் குளறுபடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதியளித்தால், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடத் தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நிபந்தனை விதித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிரஜா ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சோனம் வாங்சுக், கடந்த 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...!
20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால், அவரது உடல் எடை சுமார் 9 கிலோ குறைந்துள்ளது. இதையடுத்து, அவரது உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இரண்டு நிபந்தனைகளை சோனம் வாங்சுக் முன்வைத்துள்ளார்.
- அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து தம்மை நேரில் சந்திக்க வேண்டும்.
- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ மதிப்பெண் குளறுபடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும்.
இந்த இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிரஜா ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், அந்தப் பேரணிக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட கட்சி எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, பேரணிக்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரஜா ஜனதா கட்சியினர் நடத்தும் பேரணியில், சோனம் வாங்சுக்கிற்கு பதிலாக அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள்
இதையும் படிங்க: நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!