தவெக தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நேற்று அவர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் காரணமாக விஜய் வருவது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை 11ம் தேதி கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து வரக்கூடாது, பிரச்சார வாகனத்தின் மீது ஏறக்கூடாது, பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!
இதனிடையே, விஜய் பிரச்சாரம் எதிரொலி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை பிற்பகல் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்க்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்கள்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமையட்டும்.. 3 மாசத்துல கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்..!! மக்களுக்கு இபிஎஸ் ப்ராமிஸ்..!!