வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டியில் திமுக வேட்பாளர் டாக்டர் தருண் அவர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது: சேலத்து சிங்கம் என்று போற்றப்பட்ட மறைந்த வீரபாண்டியார் மண்ணுக்குள் நுழையும் போது என்பதை தெரிந்து விட்டோம்.கடந்த முறை வெற்றியை இழந்துவிட்டேன் ஆனால் இந்த முறை 11 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. இதை எழுச்சியோடு தேர்தல் பணிகளை ஆற்றி வெற்றி வேட்பாளர் டாக்டர் தருண் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த மண் சுயமரியாதை மிகுந்த , வீரமிகுந்த மண். இங்கு அடிமைகளுக்கு வேலை கிடையாது.
கடந்த முறை ஏமாற்றி விட்டீர்கள் இந்த முறை அதையும் சேர்த்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த சேலம் மாவட்டத்தை கழகத்தின் கோட்டையாக மாற்ற வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த காசி விஸ்வநாதன் ஐஏஎஸ் அவர்களின் மகன்தான் டாக்டர் தருண். . மருத்துவ சேவை செய்து இன்று மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துள்ளார்.
நமது திராவிட மாநில அரசு இந்த தொகுதிக்கு திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் அந்த உரிமையில் தான் ஓட்டை கேட்க வந்துள்ளோம் 540 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் திட்டம் 107 கோடி ரூபாய் மதிப்பில் சேலம் சட்டக் கல்லூரிக்கு ஹாஸ்டல் கட்டப்பட்டுள்ளது புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது , கால்நடை மருத்துவமனை பனமரத்துப்பட்டி ஏறிய சீரமைக்கும் பணி இது பாலம் கட்டுப்படி இளம்பிள்ளை கல்பாறைப்பட்டி சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!
இந்த தொகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேம்படி காலம் அரசு மருத்துவமனையில் இலவச விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துவிட்டு தான், தற்போது உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளோம்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கிராமப்புற மக்கள் ஒவ்வொருவர் 900 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி 30 லட்சம் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை காரணம் காட்டி ஒன்றிய அரசு அந்தத் திட்டத்தை நிறுத்தும் என கருதி தான் , முதலமைச்சர் ஐயாயிரம் ரூபாயை முதலமைச்சர்
வழங்கினார்.
அதேபோல் இந்த தேர்தல் அறிக்கையில் 8000 ரூபன் வழங்கப்படும் அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதுவரை மோடி அரசு தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்களை கொடுத்துள்ளதா?. தொகுதி மறு சீரமைப்புக்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று அந்த மசோதா தோல்வி அடைந்துள்ளது.ஆனால் இங்குள்ள எடப்பாடி பழனிச்சாமி அடிமையாக உள்ளார்.
இன்று உலக புகழடைந்துவிட்டது எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்தது. இதற்கு காரணம் நீங்கள் தான். என்னை கெட்ட வார்த்தையில் மட்டும் தான் அவர் திட்டவில்லை. என்னை செத்துப் போ என்று கூறிவிட்டார். எனவே நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும். நானும் ஒரு வேட்பாளராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன் சென்னை விட்டு கிளம்பி 12 நாட்கள் ஆகிறது. இனி இதான் சென்னைக்கு செல்ல வேண்டும்.
எனக்கு என் வெற்றியை விட முக்கியம் டாக்டர் தருண் அவர்களின் வெற்றி எனவே வீரபாண்டி தொகுதியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தருண் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் ஐந்து வாக்கு பத்து வாக்கு என பெற்று தரவேண்டும் மக்களிடம் வாக்காளர்களிடம் சென்று பேச வேண்டும் அடிமை கூட்டத்தையும் சங்கீ கூட்டத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது என்ற பிரச்சாரத்தை மக்கள் செய்ய வேண்டும். தலைவரின் மகனாகவும் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாகவும் கேட்கிறேன் இங்குள்ள மக்கள் வாக்காளர்களை சந்தித்து வீரபாண்டி தொகுதி டாக்டர் தருண் அவர்களுக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்று தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: “பாதம் தாங்கி பழனிசாமி இனி பால்டாயில் பழனிசாமி”... இபிஎஸ் சொன்ன வார்த்தையை வைத்து திருப்பி அடித்த உதயநிதி...!