தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேமுதிக சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0"-க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தேமுதிக-வின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம், நகர, கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவருக்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், மாநாடு குறித்த முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்:
"வருகின்ற ஜனவரி 9 அன்று மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்றது. நமது மாநாட்டை மிகப் பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்துத் தர வேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 'நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்'."
இதையும் படிங்க: தண்ணி காட்டிய கஞ்சா வியாபாரி... சுட்டுப் பிடித்த போலீஸ்... அதிரடி நடவடிக்கை...!

இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், முன்னதாக, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேமுதிக-வின் கூட்டணி நிலைப்பாடுகுறித்து, ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
எனவே, தேமுதிக-வின் எதிர்கால அரசியல் பயணம், கூட்டணி முடிவுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கியத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! அது சர்வே கல் அல்ல! சமணர் கல்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு!