தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காவல் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞர் அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக நாகர்கோவிலிலும் ஒரு இளைஞர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி மாநிலம் முழுவதும் வேதனையை ஏற்படுத்திய நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் ஏற்படாமல் அவர் உயிரிழந்தார். உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது என கூறினார். காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "SOFA MODEL அரசு"..! பொய் வழக்குகளால் திமுகவை முடக்க முடியாது..! உதயநிதி ஆவேசம்..!!