தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு அவர்களின் கடும் விமர்சனம். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து குஷ்பு கூறியதாவது: “கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா திமுகவுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.”
திமுகவை கடுமையாக சாடிய குஷ்பு, “திமுக இந்த முறை ஜெயிக்க போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்துக் கொண்டு கரையேற முயற்சிக்கிறது. ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக-பாஜக அலையில் சிக்கி திமுக காணாமல் போகும்” என்று எச்சரித்தார்.
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அவர், “அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தேமுதிகவையும் இழுத்துப் போட்டுள்ளார்கள். காங்கிரஸுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் திமுக கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.”
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம்?! முடிந்தது பேரம்?! ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் விசிட்! இதுதான் காரணம்?!

காங்கிரஸ் கட்சியின் நிலைமையை சுட்டிக்காட்டிய குஷ்பு, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரை தேறாது” என்று கூறினார்.
இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் விமர்சன ஆயுதமாக மாறியுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் இதை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
குஷ்புவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, திமுக கூட்டணியின் பலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைமை குறித்த அவரது சாடல் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இனி எப்போதும் பட்ஜெட் வாசிக்கும் தொல்லை இல்லை!! ஏமாற்றுவதை விடவில்லை! திமுகவை விளாசும் அண்ணாமலை!!