தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.
தமிழ்நாட்டுடன் சேர்த்து மேற்குவங்க மாநிலத்திற்கும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், நாடியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மேற்குவங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவிற்கு ரகசிய உடன்பாடு உள்ளதாகவும், அதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பார்வையாளர்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும் மத்தா குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலாக மேற்கு வங்கத்தில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பாஜக நியமித்திருப்பதாகவும் இந்த தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தியா கூட்டணியில் திமுக இருக்கும் நிலையிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிறந்த நட்புறவை பராமரித்து வரும் நிலையில், மமதா பேனர்ஜி இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தமிழ்நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!
பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியமான நேரத்தில், பானர்ஜி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டி, அவரது கருத்துக்களை “மிகவும் பொறுப்பற்றவை மற்றும் கண்டிக்கத்தக்கவை” என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியிருந்தார்.
மேற்கு வங்கத்திலிருந்து பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்படுவது, மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளைப் பாதிப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 500 அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. மற்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிலரே மாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய அதிகாரிகள் இடமாற்றங்கள் மாநிலத்தின் முன்னேற்றப் பணிகளுக்குப் பெரிய தடையாக உள்ளதாக மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியின் பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நினைத்ததை செய்ய முடியல..! பரப்புரையில் PTR பழனிவேல் தியாகராஜன் வருத்தம்..!!