கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் திருச்செங்கோடு தொகுதிக்கு செய்தது என்ன நான்காண்டு கால திமுக ஆட்சியில் நான் எம்எல்ஏவாக இருந்து செய்தது என்ன என விவாதிப்போம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதிக்க முன்னாள்அமைச்சர் தங்கமணி தயாரா? திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விடுத்துள்ளார்.
திருச்செங்கோடு மலைப்பாதை சர்ச்சை:
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பல திட்டங்கள் முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த மாதம் இறுதிக்குள்ளாக அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்படும்.சுற்றுவட்டச் சாலை என்பது திருச்செங்கோடு மக்களின் நீண்ட நாள்கனவு திட்டமாக உள்ளது. அதை குறிப்பிட்ட காலத்திலே நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அதுவிரைவில் செயல்பட ஆரம்பிக்கும். திருச்செங்கோட்டினுடைய போக்குவரத்து நெரிசல் அதன் மூலமாக தீர்க்கப்படும் என்பதை எல்லோரும் வலிமையாக நம்புகிறோம். அந்த சாலையில் முழுமையாகவே முழுமை அடையக் கூடிய நிலையை அடைந்திருக்கிறது. இன்னும் மூன்று இடங்களை தவிர மற்றபடி சுற்றுவட்ட சாலை முழுமையாக முடிந்திருக்கிறது. அந்த மூன்று இடங்களிலுமே பக்கவாட்டிலே வாகனங்கள் செல்வதற்கும் வழி இருக்கிறது. வசதி இருக்கிறது. அது இப்போதே பல வாகனங்கள் திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதையை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக போக்குவரத்திற்கு திறந்து விடப்படவில்லை என்று சொன்னாலும் அதை அறிந்தவர்கள் இன்றைக்கு பயன்படுத்துகிறார்கள். நானே திருச்செங்கோடு சுற்றுவட்ட சாலையை தான் பயன்படுத்துகிறேன். அதை இப்போது இருந்தே அதை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். முழுமையாக அதிகாரப்பூர்வமாக 100% முடிவடைந்த பின் சுற்றுவட்ட சாலை திறக்கப்படும்.
இதையும் படிங்க: ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

திருச்செங்கோட்டினுடைய போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறோம். தற்போது இருக்கின்ற பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதிய வசதிகளோடு திருச்செங்கோடு பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட இருக்கின்றது. இப்படி பல்வேறு விஷயங்கள் பல்வேறு திட்டங்கள் இன்றைக்கு நடைமுறைப்படுத்த இருக்கின்றோம். வைகாசி தேர் திருவிழா இன்றைக்கு கொடி ஏற்றத்தோடு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டு மகிழ்ச்சியோடு எல்லோரும் வைகாசி தேர் திருவிழாவை கொண்டாட வேண்டும். அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வேண்டும். வருகின்ற பத்தாம் தேதி தேர் வடம் பிடிக்க இருக்கின்றோம். எல்லோரும் அதிலே கலந்து கொள்ள வேண்டும் என்று இதன் மூலமாக நான் அழைப்பை விடுக்கின்றேன்.
நேருக்கு நேராய் வரட்டும்:

பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் முன்னாள் அமைச்சர்தங்கமணிநீங்கள் நான்காண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என கேட்கிறார் என செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு சவால் விடுகிறேன் அதிமுக ஆட்சியிலே பத்தாண்டுகள் இந்த தொகுதிக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை அவரும் ஆதாரத்தோடு வரட்டும். நானும் இந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்யப்பட்டு இருக்கிறது என்பதை ஆதாரத்தோடு வருகின்றேன்.பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தெரிவித்து விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன் தைரியம் இருந்தால் கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் திருச்செங்கோட்டுக்கு என்னவெல்லாம் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை ஆதாரத்தோடு எடுத்து வாருங்கள் நானும் இந்த நான்காண்டுகளிலே இதையெல்லாம் என்ன திட்டங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன் என்று கொண்டு வருகிறேன் பேசுவோம்.என்ன சவால் விடுத்தார்”
பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அதிமுக:
கடந்த அதிமுக ஆட்சியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 20 கோடி ரூபாய் நிதி வைத்திருந்ததாகவும் தற்போது அதை கல்லூரி கட்டுகிறோம் என்கிற பெயரில் காலி செய்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டுகிறார் என கேட்டபோது, “அவர்களுடைய அறங்காவலர் குழு தலைவராக முன்னாள் எம்எல்ஏ திருமதி பொன் சரஸ்வதி அவர்கள் இருந்தபோது 20 கோடி ரூபாய் வைத்து சென்றதாகவும் அந்த 20 கோடி ரூபாயை முழுமையாக காலி செய்து விட்டோம் என்றும் ஒரு பத்து நாட்களுக்கு முன்பே அவர் திருச்செங்கோட்டிலே பொதுக்கூட்டத்தில் பேசினார். அதை செய்தியாக நான் பார்த்தேன். எதுவும் தெரியாமல் பேசுகிறார். யாரோ தவறாக எழுதிக் கொடுத்து பேசுகிறார். என்கிற விதமாக நான் புரிந்து அதை அப்படியே விட்டு விட்டேன்.

ஆனால் மீண்டும் நேற்று தேவனாங்குறிச்சியில் பேசியதாக இன்றைக்கு நானும் செய்தித்தாளிலே பார்த்தேன். அர்த்தநாரீஸ்வரர் கோயிலுடைய கணக்கு வழக்குகள் அதிகாரப்பூர்வமாக இதில் இருக்கிறது. மரியாதைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்து பதவி விலகிய போது மூன்று கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 737 ரூபாய் வைத்திருக்கிறார்கள். எங்கே இருவது கோடிஇருந்தது. மூன்று கோடியே ஏழு லட்சத்தை வைத்துவிட்டு 20 கோடி வைத்ததாக தவறான ஒரு செய்தியை இன்றைக்கு மக்களிடத்திலே தொடர்ந்து பரப்புரை செய்கிறார். இன்றைக்கு 20 கோடி வைத்திருக்கிறோம். இன்றைய தேதியில் அதுவும் மார்ச் 31 ல் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 20 கோடி நாங்கள் இது சேர்த்து வைத்திருக்கிறோம். எதுவும் தெரியாமல் புரியாமல் அவர் பேசுவது கண்டிக்கத்தக்கது. நான் அதற்கான ஆதாரங்களை காண்பிக்கிறேன்.” என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!