தந்தை மகன் மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. பாமகவின் நிர்வாகங்களை தைலாபுரத்தில் ராமதாஸ் ஒரு பக்கம் அறிவிக்க, பனையூர் அலுவலகத்தில் இருந்து பதில் அறிவிப்புகளை அன்புமணி வெளியிடுகிறார். இப்படி மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பாமக இரண்டாக உடைந்து தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக முன்னாள் MLA சக்தி கமலாம்பாள், பெரியய்யா ராமதாஸ், நிர்பந்தத்தின் காரணமாகவும், சூழ்நிலை கைதியாக யாரோ சொல்லிக் கொடுத்ததை, எழுதிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் நிச்சயமாக தன் மகனை பற்றி அவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று கூறினார். பெரியய்யா ராமதாஸ் வயதானவர். எனக்கு கூட 86 வயதாகிறது. ஐயா வயதும் என் வயதும் ஒரே வயது, நான் அவரை விட இரண்டு மாதம்தான் பெரியவள். அவர் பின்னோக்கிய நான் செல்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..!

மேலும் ஐயா ராமதாஸ் அவர்கள் எதுவும் சாதிக்கவில்லையா? 108 ஆம்புலன்ஸ் சேவை, புகையிலையை ஒழித்தார், மதுவை ஒழித்தார், எங்கள் சின்னையா புகையிலை, பான்பராக் ஆகியவற்றை ஒழித்தார் என்று கூறிய சக்தி கமலாம்பாள், யாராவது தன் மகனைப் பற்றி இழிவாக பேசுவார்களா? இது அவராக பேசவில்லை.. இப்போதும் எங்கள் சின்னையா தனது தந்தையை தெய்வமாகத்தான் கருதுகிறார். தயவுசெய்து உண்மை என்னவென்று தெரியாமல் போடாதீர்கள் என்று ஊடகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐயா ராமதாஸ் அவர்களின் கொள்கைகளையும், கனவுகளையும், லட்சியங்களையும் சின்னையா நிச்சயமாக நிறைவேற்றுவார். இனிமேல் அவருக்கு பின்னடைவு கிடையாது முன்னேற்றம்தான், அவரது கை இனிமேல் ஓங்கும் என அடித்துக் கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..!