தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவின் முடிவு தேமுதிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டணி விவகாரத்தில் தேமுதிக அதிரடி முடிவை எடுக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி குறித்தே எல்லாரும் கேட்கறீர்கள்.. எப்போது பார்த்தாலும் கூட்டணி குறித்தே கேள்விகள் வருகிறது. இதற்கு நான் நிறைய முறை விளக்கமளித்துவிட்டேன்.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!

கொஞ்சம் எங்களுக்கு டைம் கொடுங்கள்.. காலஅவகாசம் தர வேண்டும் என பல முறை சொல்லிவிட்டேன். இப்போது நாங்கள் எங்கள் கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நேரம் வரும்போது யாருடன் கூட்டணி.. எத்தனை தொகுதிகள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். எனவே, இப்போது கூட்டணி குறித்து கேட்க வேண்டாம் விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நாளும் தேமுதிக தொண்டரும் கடினமான காலமாகவே இருக்கிறது.

அவர் இல்லாமல் அடுத்தாண்டு தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. அது மிக பெரிய வருத்தத்தை கொடுத்தாலும் அவருடைய கனவு லட்சியத்தை வென்று எடுப்போம். வெற்றியை அவருக்கு சமர்பிப்போம் என்ற உறுதியோடு பணிகளை செய்து வருகிறோம். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சொல்ல கொஞ்சம் டைம் வேண்டும். அடுத்த 6 மாதங்கள் முன்பே குறிப்பிட்டது போல கட்சி பணிகளில் கவனம் செலுத்த உள்ளோம். ஜனவரி மாதம் எங்கள் கட்சியின் மாநாடு இருக்கிறது. கட்சி பணிகளை முடித்துவிட்டு மாநாட்டில் மிக தெளிவாக எல்லாமே சொல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீட் தரேன்னு அதிமுக எழுதிக் கொடுத்தது உண்மை தான்…! அதிருப்தியில் பிரேமலதா?