மோந்தா புயலானது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில முன்னதாகவே இந்த மோந்தா தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. ஆந்திர பிரதேசம், ஒடிசாவை ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்களில் மழை பெய்யும் பொழுது அதித காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த தீவிர புயலானது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவைச் சுற்றி இருக்கக்கூடிய மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிதமிழகத்தைப்லையல், தற்போது தீவிர புயல் கரையை கடக்கும் போது 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுவடைந்த மோந்தா புயலானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள்ளாக கரையைக் கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு... ஆனா பிளான் மாறிடுச்சு...!
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும்போது 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். மேலும் 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மிரட்டப்போகுது மழை... உஷார் மக்களே... 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!