விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீதுபல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் எதிரொலியாக நேற்று சோழிங்கநல்லூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில வந்து பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அங்க அனைவரும் பங்கேற்றதால் அன்புமணி கையில் முழு பாமகவும் வந்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது.

அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அதேசமயத்தில், பாமக பொருளாளர் திலகவதி பாமா , மயிலம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை கட்சி பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால் உடனே பொதுக்குழு கூடி தேர்வு செய்த உறுப்பினர்களை எளிதில் நீக்க முடியாது என்றும், அவர்கள் அதே பதவியில் நீடிப்பதாகவும் அன்புமணி அறிவித்தார். இப்படி அப்பா, மகன் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வரும் நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வெளியான செய்தி பாமகவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பாபு மற்றும் ஆடிட்ட சுப்புரத்தினம் ஆகியோருடன் ஒரு ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வந்து ஒரு சில கணக்கு வழக்குகள் மாற்றப்படுகிறதா? ராமராஸ் வசமுள்ள சொத்துக்கள் பிரிக்க ஆலோசிக்கப்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகள் எழும்பி உள்ளது.

இதையும் படிங்க: மாறியது பாமக அலுவலக முகவரி.. முழுவீச்சில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்..!
குறிப்பாக 1000 கோடி அளவிற்கு ராமதாஸ் வசம் சொத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை யாருக்கு பிரித்துக் கொடுப்பது என அவர் ஆலோசிக்கலாம் என்றும், கட்சியில் அன்புமணியின் கை ஓங்கி வருவதால் தேர்தல் ஆணைய விதிகளின் படி கட்சியில் பிரதிநிதிகளை நியமிக்கும் உரிமை யாருக்கு உண்டு என ராமதாஸ் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டருடன் ஆலோசிக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. ஆனால் பாமக தரப்பிலோ அப்பா, மகன் இடையிலான உட்கட்சி பிரச்சனையைச் சரி செய்வது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனது அணியை வீழ்த்த சூழ்ச்சி நடக்கிறது.. அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!