திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ 'ஜெய் பீம்' என்று அறையில் எழுதி வைத்தமைக்காக இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மாணவர்களை தேச விரோதிகள் என்றுகூறி நேற்று இரவோடு இரவாக வெளியே அனுப்பப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் இந்தியப்பெருநாடு பாலஸ்தீன ஆதரவு நிலையிலிருந்து மாறி இனப்படுகொலைநாடான இஸ்ரேலுக்கு துணைநிற்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம் எனவும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுதான் அத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபடுகிறது என்றால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் அதற்கு துணைபோவது வெட்கக்கடானது என்றும் சீமான் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: விளையாட்டு திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை... போராட்டம் வெடிக்கும்! சீமான் எச்சரிக்கை!

ஜெய் பீம் என்ற சொல் எப்படி இந்த நாட்டிற்கு எதிரானது என கேள்வி எழுப்பிய சீமான், திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் மூவர் மீது தேவையின்றி எதேச்சதிகாரப்போக்குடன் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை கைவிட்டு, அவர்களை உனடியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மூக்குத்தியை கழற்றி தேர்வு எழுத வைக்கிறீர்களே., பயங்கரவாதிக்கு உடனே பதிலடி கொடுக்க தெரியாதா? சீமான் காட்டம்..!