டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேரளா தேர்தல் பிரசாரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி நாளை கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று இரவு சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தச் செய்தி காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்!
ராகுல் காந்தி தாயாரின் உடல்நிலையை கவனிக்கும் வகையில் கேரளப் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளாவுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கேரளாவில் தேர்தல் நெருங்கும் நிலையில், ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது யுடிஎஃப் வேட்பாளர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ராகுலின் ரோடு ஷோவை எதிர்பார்த்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை விரிவான அறிக்கை வெளியிடவில்லை. மருத்துவர்கள் அவரது நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தாயாரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை விரைவில் சீரடைய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கேரளா தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனியா காந்தியின் உடல்நிலை விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.200 கோடி சொத்தை மறைத்த பாஜக வேட்பாளர்!! வேட்புமனுவில் வெளியான உண்மை! வெளுத்து வாங்கும் காங்.,!