தமிழக அமைச்சரவைக் கூட்டங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், மக்களின் நலனை உறுதிப்படுத்தவும், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கவும் முதன்மையான பங்காற்றுகின்றன. இந்தக் கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகின்றன.
மேலும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் தேவைப்படும் பிற நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முக்கியமானவை.
அமைச்சரவைக் கூட்டங்கள் மாநிலத்தின் நலனுக்காக புதிய கொள்கைகளை வகுப்பதற்கும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிவிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உதாரணமாக, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் இங்கு நடைபெறுகின்றன. மேலும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது குறித்த முடிவுகளும் இந்தக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது! ரிப்பன் மாளிகையில் பரபரப்பு.. போலீசார் குவிப்பு..!
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் ஏற்றுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய திட்டங்கள், புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீமானுடன் ஓயாத பஞ்சாயத்து! வருண் குமார் ஐபிஎஸ் திடீர் டிரான்ஸ்பர்...